பின்வரும் தலைப்பின் பிரிவுகள் |
அறிவியல் |
---|
அறிவியல் (ⓘ) (Science) என்பது "அறிந்து கொள்ளுதல் " எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன . அறிவியல் அறிவைப் பயன்படுத்தும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும். எனவே, அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது. என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை இபின் அல் ஹய்தம் அவர்களால் அவரது ஒளியியல் நூலில் வறையறுக்கப்பட்டது. பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்டத்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்காலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம் எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.
முதன்மைக் கட்டுரை:அறிவியலின் வரலாறு
பரந்த பொருளில் அறிவியல் புத்தியல் ஊழிக்கு முன்பே பல வரலாற்று நாகரிகங்கள் நிலவியது. புத்தியல் அறிவியல் தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் அணுகுமுறையில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.
அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்றின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தன.
அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது. ஒரு விளக்கச் சிந்தனைச் செய்முறை அல்லது கருதுகோள் ஒக்காம் அலகு நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு விளக்கமாக முன்வைக்கப்படும். இது பொதுவாக அந்நிகழ்வுக்கான பிற ஏற்புடைய உண்மைகளோடு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புது விளக்கத்தைப் பயன்படுத்திச் செய்முற்யைலோ நோக்கீட்டாலோ நிறுவ முடிந்த பொய்ப்பிக்கும் முன்கணிப்புகளை உருவாக்கலாம்.இந்த முன்கணிப்புகளை நிறுவும் செய்முறைகளையோ அல்லது நோக்கீடுகளையோ தேடும் முன்பே, வேறு திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை மெய்ப்பிக்க, வெளியிடவேண்டும். முன்கணிப்பின் மெய்ப்பிக்க இயலாமை ஆய்வு நன்றாக முன்னேறுகிறது என்பதற்குச் சான்றாக அமையும். இது இயற்கை நிகழ்வை நோக்குவதன் வழியிலும் இயற்கை நிகழ்வுகளைக் கட்டுபடுத்திய நிலைமைகளின் கீழ் ஆய்வுப்புலத்துக்கு தகுந்தபடி ஒப்புருவாக்கம் செய்யும் செய்முறைகளின் வழியிலும் (வானியல், புவியியல் போன்ற நோக்கீட்டு அறிவியல் புலங்களில், கட்டுபடுத்திய செய்முறைகளின் இடத்தை முன்கணிப்பு நோக்கீடு பகிர்கிறது). உண்மையினை அடைகிறது. மேலும், முதல்-விளைவு (காரணக் காரிய) உறவை நிறுவவும், ஒப்புறவுப் பிழையைத் தவிர்க்கவும் அறிவியல் நிறுவலுக்கு செய்முறை மிகவும் இன்றியமையாததாகும்]]). ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும். கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும்.
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகளை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒரு விளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும். செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும். அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.
அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றி அமைக்க இயலும். உதாரணமாக:
ஆராய்ச்சி | விளைவுகள் |
---|---|
நிலை மின்சாரம் மற்றும் காந்தவியல் (c. 1600) மின்னோட்டம் (18ஆம் நூற்றாண்டு) |
அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன மின்னியல், மின்விளக்கு, தொலைக்காட்சி, மின்சார வெப்பமியக்கி, மண்டைஒட்டு காந்த தூண்டுதல், ஆழ் மூளை தூண்டுதல், காந்த நாடா, ஒலிபெருக்கி, திசைகாட்டி மற்றும் இடிதாங்கி உட்பட. |
ஒளியின் விளிம்பு விளைவு (1665) | ஒளியியல், ஆதலினால் ஒளியிழை (1840s), நவீன நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள், கேபிள் டிவி மற்றும் இணையம் |
ஜெர்ம் கோட்பாடு (1700) | சுகாதாரம், தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; பிறபொருளெதிரி, நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் இலக்கு சிகிச்சைகள், புற்றுநோய் வரும்முன் அகற்று சிகிச்சைகள். |
தடுப்பு மருந்தேற்றம் (1798) | வளர்ந்தநாடுகளிலிருந்து அதிகளவில் தொற்றுநோய்களை நீக்க வழிவகுத்தது, மேலும் உலகளவில் சின்னம்மை நோயை நீக்கயது. |
ஒளிமின்னழுத்த விளைவு (1839) | சூரிய மின்கலம் (1883), இதிலிருந்து சூரிய மின் ஆற்றல், சூரிய சக்தியினால் இயங்கும் கைக்கடிகாரம், கணிப்பான்கள் மற்றும் பிற சாதனங்கள். |
புதனின் விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள் சிறப்புச் சார்புக் கோட்பாடு (1905) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடுகளுக்கு (1916) வழிவகுத்தது |
செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான புவியிடங்காட்டி (1973), செய்மதி இடஞ்சுட்டல் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் |
வானொலி அலைகள் (1887) | வானொலியானது நன்கறிந்த டெலிபோனி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் பொழுதுபோக்குகளில் மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள் அவசர சேவை, ரேடார் (கடற்பயணம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு), மருத்துவம், வானியல், கம்பியற்ற தகவல்தொடர்பு, புவி இயற்பியல், மற்றும் பிணையம். மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட நுண்ணலைகளை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது. |
கதிரியக்கம் (1896) மற்றும் எதிர்ப் பொருள் (1932) | புற்றுநோய் சிகிச்சை (1896), கதிரியக்கக் காலமதிப்பீடு (1905), அணுக்கரு உலைகள் (1942) and அணு ஆயுதம் (1945), சுரங்க பொறியியல், பெட் வரைவி (1961), மற்றும் மருத்துவ ஆராய்ச்சி |
எக்சு-கதிர் (1896) | மருத்துவப் படிமவியல், சிடி வரைவி உட்பட |
படிகவியல் மற்றும் குவாண்டம் இயங்கியல் (1900) | குறைக்கடத்திக் கருவிகள் (1906), இதிலிருந்து நவீன கணித்தல் மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு உட்பட – செல்லிடத் தொலைபேசி, எல்.இ.டி விளக்குகள் மற்றும் சீரொளிகள். |
நெகிழி (1907) | பேக்கலைட்டு களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது |
நுண்ணுயிர் எதிர்ப்பி (1880s, 1928) | சல்வார்சன், பென்சிலின், டாக்ஸிக்ளைன். |
அணு காந்த அதிர்வு (1930s) | அணு காந்த அதிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி (1946), காந்த அதிர்வு இமேஜிங் (1971), இயங்ககூடிய காந்த அதிர்வு இமேஜிங் (1990s). |
Alhazen (or Al-Haytham; 965–1039 C.E.) was perhaps one of the greatest physicists of all times and a product of the Islamic Golden Age or Islamic Renaissance (7th–13th centuries). He made significant contributions to anatomy, astronomy, engineering, mathematics, medicine, ophthalmology, philosophy, physics, psychology, and visual perception and is primarily attributed as the inventor of the scientific method, for which author Bradley Steffens (2006) describes him as the "first scientist".
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite book}}
: Invalid |ref=harv
(help)
அறிவியல், அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
அறிவியல் முறை,அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
அறிவியலின் முறையியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி ஒன்று. இதழ் 3, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.
அறிவியலின் வரலாறெழுதியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி 9, இதழ்கள் 33-36, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.