1920கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1920ஆம் ஆண்டு துவங்கி 1929-இல் முடிவடைந்தது. இப்பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வாக சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சியின் பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி, போல்ஷெவிக்குகளின் புதிய பொருளாதாரத் திட்டம் (1921 - 1928) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பத்தாண்டுகளிலேயே கம்யூனிசக் கொள்கைக்கெதிரான பாசிசக் கொள்கை மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது.